தமிழக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு – கோரிக்கை!
தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் இட ஒதுக்கீடுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்து வரும் நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சமநீதி வழங்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அரசுக்கு கோரிக்கை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து இட ஒதுக்கீட்டிலும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கும் சமநீதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். முதல்வருக்கு எழுதிய இந்த கடிதத்தில் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முதன்மை பெற அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் சமபங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!
கடந்த அதிமுக ஆட்சியில் 7.5% மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். ஆனால் தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முதன்மை பெறுவதற்கு அரசு பள்ளிகளுக்கு இணையாக அரசு உதவிபெறும் பள்ளிகள் பங்காற்றியது குறித்து ஏதும் பேசப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வரவேற்கும் தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு, தமிழக அரசினால் வழங்கப்படும் மருத்துவ மாணவர் இட ஒதுக்கீடு போன்ற அனைத்து இட ஒதுக்கீடுகளில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சமநீதி வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.