சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 14ம் தேதி நடைதிறப்பு!

0
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 14ம் தேதி நடைதிறப்பு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஜூன் 14ம் தேதி நடைதிறப்பு!
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 14ம் தேதி நடைதிறப்பு!

கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நடக்க உள்ள ஆனி மாத பூஜையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவில் நடைதிறப்பு:

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைக்காக திறக்கப்பட உள்ள நிலையில், இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையானது வரும் ஜூன் 14ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்க உள்ளார்.

வாட்ஸ் அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள் அறிமுகம்!

ஜூன் 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது. இந்நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை, முடிந்து காலை 9.30 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

இந்த காலத்தில் வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் ஏதும் நடக்காது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆனி மாத பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மாத வைகாசி மாத பூஜைக்கு நடை திறக்கப்பட்ட போதும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!