சென்னை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மாநகராட்சி எச்சரிக்கை!
சென்னையில் தான் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக கவசம்:
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கட்டாயமாக மக்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகளை ஏற்பாடு செய்ய சொல்லி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் கடந்த ஜூன் 13ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் கொரோனா கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பள்ளி மாணவர்கள் எச்சரிக்கையோடு பள்ளிகளில் முக கவசம் அணியும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தான் கொரோனா பரவளினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தினால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர்களும் கட்டாயமாக முக கவசம் அணியும் படி கல்வி நிறுவனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது இவற்றில் ஏதேனும் ஒரு அறிகுறிகள் இருந்தாலும் கூட உடனடியாக கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தீவிரமாக பரவுவதை கருத்தில் கொண்டு அனைத்து கல்வி நிறுவனங்களும் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.