தமிழகத்தில் 3 முதல் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் சட்ட பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சிறுபான்மையினர் நலத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதற்கு பதிலளித்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
மாணவர்கள் கவனத்திற்கு
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் மார்ச் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் 18ஆம் தேதி அன்று 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த அறிக்கை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் கட்ட பட்ஜெட் விவாதம் கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு ஏப்ரல் 8ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இதையடுத்து தற்போது சிறுபான்மையினர் நலத் துறை சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகளை பற்றி பார்ப்போம். இதில் இவர் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தற்போது கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதனால் இதனை தடுக்கும் விதமாக சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஒரு மாதத்திற்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!
அதன்படி தமிழகத்தில் கிராமப்புறங்களில் படித்து கொண்டிருக்கும் 3 முதல் 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் 6ம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு ரூ.2.70 கோடி செலவினம் ஏற்படும் என்றும் கணக்கிடப்படுகிறது. இதற்கு முன்பாக அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.