அடுத்த ஒரு மாதத்திற்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!

0
அடுத்த ஒரு மாதத்திற்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசு அதிரடி நடவடிக்கை!
அடுத்த ஒரு மாதத்திற்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசு அதிரடி நடவடிக்கை!
அடுத்த ஒரு மாதத்திற்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் பாதுகாப்பின்மை குறித்த அச்சத்திற்கு மத்தியில் வடக்கு பிராந்தியத்தில் மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை விதித்து கென்யா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

இரவு ஊரடங்கு:

கென்யா அரசாங்கம், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மார்சபிட் கவுண்டியில் அதிகரித்து வரும் பாதுகாப்பின்மையை கவனத்தில் கொண்டு அதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு மாத இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இது தவிர அண்டை நாடான இசியோலோ கவுண்டியில் உள்ள கோமு சப் கவுண்டி மற்றும் கென்யா-எத்தியோப்பியா எல்லைக்கு அருகில் உள்ள சோலோலோ பகுதியிலும் விடியற்காலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சரவைச் செயலர் ஃபிரெட் மதியாங்கி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – தொடங்கியது அக்னி நட்சத்திரம்!

இது குறித்து கென்யாவின் தலைநகரான நைரோபியில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘மார்சாபிட்டில் துப்பாக்கிகளின் பெருக்கத்திற்கும், கோமுவில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகள் நடைபெற்று வரும் குழப்பத்திற்கும் இடையிலான தொடர்பை நாங்கள் கவனித்தோம். அதனால் தினசரி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளை அடுத்த 30 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்தோம். சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை இலக்காகக் கொண்ட நிராயுதபாணியாக்கும் பயிற்சியுடன் இணைந்து இயங்கும்’ என்று கூறியுள்ளார்.

Exams Daily Mobile App Download

கடந்த வாரத்தில் அரசாங்கம் இது குறித்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான பணியாளர்களை திரட்டியதாகவும், அவர்கள் ஏற்கனவே களத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் வடக்கு கென்யாவில் எத்தியோப்பியாவின் எல்லையில் வசிக்கும் போரானா மற்றும் கர்பா சமூகங்களுக்கு இடையேயான மோதல்கள், மேய்ச்சல் மற்றும் கால்நடைகளைத் துரத்துவது தொடர்புடைய பழிவாங்கும் தாக்குதல்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால் சமீபத்திய மாதங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!