தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் எவ்வாறு செயல்படும்?
தமிழகத்தில் 2022 – 2023ம் கல்வியாண்டில் பள்ளிகள் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கடந்த 2021, 2022ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிப்படைந்தது. மேலும் ஏழை, எளிய மாணவர்களால் ஆன்லைன் கல்வி கற்க முடியாததால் ஊரடங்கு காலத்தில் இவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறியாக மாறி விட்டது. இது போன்ற அவல நிலையை சரி செய்ய அரசு சார்பாக கல்வி தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் அனைத்து வகுப்புகளுக்கும் கால அட்டவணையின் படி தினசரி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்புகள் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக குறையாத நிலையில் அரசின் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் படி மாணவர்கள் வகுப்பறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் கொரோனா மூன்றாம் அலை பரவியது. இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று எச்சரிந்திருந்த நிலையில் பெற்றோர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்தது. இந்த மூன்றாம் அலை சற்று கட்டுக்குள் வந்த பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பிட்மென்ட் காரணி உயர்வு?
அதனை தொடர்ந்து கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இனி வரும் 2022 – 2023 ம் கல்வியாண்டில் பள்ளிகள் கொரோனா கால அட்டவணை படி இல்லாமல் வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வரும் கல்வியாண்டில் 12ம் வகுப்பிற்கு மார்ச் 14ம் தேதியும், 11ம் வகுப்புக்கு மார்ச் 14ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு ஏப்ரல் 3ம் தேதி முதல் தொடர்ந்து பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.