மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பிட்மென்ட் காரணி உயர்வு?
சமீபத்தில் வெளிவந்துள்ள 7வது ஊதியக்குழு தகவலின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணி உயர்வு குறித்த பெரிய அறிவிப்பு இன்று (மே.25) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்வடைய வாய்ப்புள்ளது.
பிட்மென்ட் காரணி
நீண்ட காலமாக ஃபிட்மென்ட் காரணி உயர்வுக்காக கோரிக்கை வைத்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் இது குறித்த நல்ல செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட காலக் காத்திருப்பு இன்று (மே.25) முடிவுக்கு வரலாம் என சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், ஃபிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்கு உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்த ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு கிடைக்கும் என்று தெரிகிறது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இதை செய்யாதீங்க! எச்சரிக்கும் PIB!
இதன் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளது. தற்போது வரை, அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் கீழ் 2.57 சதவீத ஃபிட்மென்ட் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதை 3.68 சதவீதமாக அரசாங்கம் உயர்த்தினால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 ஆக உயரும். மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை கணக்கிடுவதற்கு இந்த ஃபிட்மென்ட் காரணி பயன்படுத்தப்படுகிறது கவனிக்கத்தக்கது.
Exams Daily Mobile App Download
இப்போது ஃபிட்மென்ட் காரணியை 3.68 ஆக உயர்த்துவது குறித்த முடிவு இன்று (மே.25) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்படலாம் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தும். அந்த வகையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், அலவன்ஸ்கள் தவிர்த்து 2.57 என்ற அடிப்படையில் ஃபிட்மென்ட் காரணியின்படி ரூ.46,260 (18,000 X 2.57 = 46,260) பெறுவார்கள். இதனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக உயரும்.