இந்தியாவில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் இறக்குமதி – பாகிஸ்தான் அரசு அனுமதி!
இந்தியாவில் இருந்து வரும் முக்கியமான மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.
இறக்குமதி அனுமதி:
பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களுக்கு தேவையான மருந்து, உணவு, எரிபொருள் என அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் சிரமத்தில் இருக்கின்றனர். பாகிஸ்தான் அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் டாலர் கடன் உதவு வழங்க இருக்கிறது. மேலும் நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்து பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் இந்தியாவில் இருந்து முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இது குறித்து பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இறக்குமதி கொள்கை ஆணை 2022-ன் கீழ், இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை கொடியேற்றம் – ஏற்பாடுகள் தீவிரம்!
அந்த வகையில் இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் கொள்முதல் செய்வதற்கு இனி எந்த தடையும் இல்லை. இறக்குமதி செய்ய தடையில்லா சான்று பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.