IIM நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பித்து பயன்பெறவும்..!
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM Trichy) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் Professor, Associate Professor, Assistant Professor போன்ற பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (04.05.2022) இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM Trichy) Professor, Associate Professor, Assistant Professor போன்ற பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் Ph.D Degree-யை முடித்தவராக இருக்க
வேண்டும். - Assistant Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் teaching/research/ industrial experience ஆகிய பணி சார்ந்த பிரிவுகளில் 3 வருடம் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Associate Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 3 வருடம் Assistant Professor- ஆக பணிபுரிந்தவராகவும், 6 வருடம் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
- Professor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் IITs, IISc, IIM, NITIE மற்றும் IISCR போன்ற கல்வி நிறுவனங்களில் 4 வருடம் Associate Professor-ஆக பணிபுரிந்தவராகவும், 10 வருடம் வரை பணி சார்ந்த பிரிவுகளில் அனுபவம் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் Level 12, Level 13A2, Level 14A ஊதிய அளவின்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
IIM Trichy விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 04.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.