முடிவை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் ‘இதயத்தை திருடாதே’ சீரியல் – ரசிகர்கள் ஷாக்!
கலர்ஸ் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே தொடர் நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கு ஹிமா பிந்துவும் இந்த சீரியல் குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதயத்தை திருடாதே:
விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அன்றாடம் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளை படம் போட்டு காட்டுவதால் இந்த தொலைக்காட்சி சீரியல்களை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு காதலர் தினத்தின் சிறப்பாக கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் இதயத்தை திருடாதே.
ஆரம்பத்தில் இருந்தே இதயத்தை திருடாதே தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இதயத்தை திருடாதே தொடரில் சஹானா கதாபாத்திரத்தில் ஹிமா பிந்துவும், சிவா கதாபாத்திரத்தில் நவீனும் நடித்து கொண்டிருக்கிறார்கள். சஹானா மற்றும் சிவா ஜோடிக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் நவீனுக்கு பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரின் திருமணத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இதயத்தை திருடாதே தொடர் நிறைவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிமா பிந்துவும் தற்போது இது குறித்து பேசியுள்ளார். அதாவது இன்னும் சில நாட்களில் இதயத்தை திருடாதே தொடர் முடிவடைய போவது உண்மை தான். இதயத்தை திருடாதே சீரியலில் நான் மிகவும் ரசித்து நடித்தேன். இவ்வளவு சீக்கிரம் இந்த சீரியல் முடியும் என நினைக்கவில்லை. சஹானா கதாபாத்திரத்தை தான் மிகவும் மிஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார். மேலும், கூடிய விரைவில் மற்றொரு சீரியலில் அறிமுகமாவேன் எனவும் கூறியுள்ளார்.