ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புவோர் கவனத்திற்கு – IRCTC, ஆதார் இணைப்பு வழிமுறைகள்!
இந்தியாவில் ரயில்வே அமைச்சகம் ரயில் பயணிகளுக்கு புதிய சலுகையை வழங்கியுள்ளது. இதன் மூலம் பயணிகள் ஒரு ஐடியை பயன்படுத்தி 6 டிக்கெட் வரை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முடியும்.
டிக்கெட் முன்பதிவு:
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவும் சூழலை கருத்தில் கொண்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பயணிகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும் என்று ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன் பதிவு அடிப்படையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
உக்ரைன் கார்கிவை கைப்பற்றிய ரஷ்யா – ‘இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்’! தூதரகம் எச்சரிக்கை!
இந்த நிலையில் ஐஆர்சிடிசி எனும் இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தற்போது கூடுதல் சலுகையாக ஒரே நேரத்தில் 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் உங்கள் ஆதார் எண்ணை IRCTC இணைந்திருப்பது அவசியமாகும். IRCTC கணக்குடன் ஆதார் எண்னை இணைக்கும் முறைகள் பின்வருமாறு.
ஐஆர்சிடிசி – ஆதார் இணைக்கும் முறைகள்:
- ஐஆர்சிடிசி இணையதளத்தில் உங்களின் ஐடியை லாகின் செய்து உள்நுழையவும்.
- ஆதாரை இணைக்கவும்” என்பதைக் கிளிக் செய்து ஆதார் எண்ணை பதிவிடவும்.
- பிறகு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP SEND செய்து அதை உரிய இடத்தில் பதிவிட வேண்டும்.
- அடுத்த கட்டமாக கேஒய்சி விவரங்கள் ஆதாரிலிருந்து பெறப்பட்டு செயல்முறைகள் முடிவடையும். இறுதியாக ஆதார் எண் இணைக்கப்பட்ட தகவல் உங்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உங்களுக்கு கிடைக்கும்.