ICMR மத்திய அரசு நிறுவனத்தில் டிகிரி படித்தவருக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Research Assistant பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 13.07.2022 கடைசி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
ICMR வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்ட அறிவிப்பில் Research Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Science பாடப்பிரிவில் Graduate அல்லது Master Degree பெற்றவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் MS Word / Excel / Powerpoint போன்றவற்றில் அனுபவம் பெற்றவராகவும், Data Collection / Data Analysis மற்றும் Data Handling ஆகிய பணி சார்ந்த பிரிவில் குறைந்தது 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Exams Daily Mobile App Download
இந்த ICMR நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ICMR தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
Research Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (13.07.2022) மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.