IBPS Clerk 7855 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
IBPS (Institute of Banking Personnel Selection) நாடு முழுவதும் உள்ள பல வங்கிகளில் எழுத்தர் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆனது 27.10.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
புதிய IBPS கிளார்க் அறிவிப்பு 2021 இல், 7855 எழுத்தர் கேடர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும். அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் Preliminary Examination மற்றும் Mains Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். General/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/-யும் SC/ ST/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- யும் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப பதிவு:
- முதலில் IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் நுழையவும்.
- அதற்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் தங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- இப்போது விண்ணப்பத்தை கவனமாக நிரப்பவும்.
- விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டவுடன், அதை சமர்ப்பிக்க வேண்டும்.
- இப்போது ஒரே நேரத்தில் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால், அவர் ஏற்கனவே உள்ளிட்ட தகவல்களை சேமிக்க முடியும்.
- தகவல் அல்லது பயன்பாடு சேமிக்கப்படும் போது, ஒரு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் கணினியால் உருவாக்கப்பட்டு திரையில் காட்டப்படும்.
- இந்த பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.
- இறுதியாக ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் கணினியில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பிரிண்ட் அவுட் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.