மாநிலம் முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல்? கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு தளர்வு
மாநிலம் முழுவதும் கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் சில கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை தளர்த்த ஹிமாச்சல பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை வீழ்ச்சியை சந்தித்து வருவதால், தொற்றுநோயின் மூன்றாவது அலை உச்சத்தின் போது விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், வகுப்பறைக்குள் அனுமதிக்கலாமா? கல்வித்துறை விளக்கம்!
இது தொடர்பான முடிவு முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த உத்தரவு குறித்து அரசாங்க அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஹிமாச்சல பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறது. அதன் படி, மாநிலம் முழுவதும் இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.
Join Our TNPSC Coaching Center
இதற்கு முன்னதாக ஹிமாச்சலப் பிரதேச அரசு, கடந்த ஜனவரி 5 ஆம் தேதியன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதித்தது. தொடர்ந்து இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஜனவரி 31 அன்று திருத்தப்பட்டது. இப்போது மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும், மக்கள் கூடுவதற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாநில அரசின் உத்தரவின்படி, அனைத்து சமூக, மத, கலாச்சார, நிகழ்வுகள் திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகள் அனைத்தும் 50 சதவீத திறனில் அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.