பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், வகுப்பறைக்குள் அனுமதிக்கலாமா? கல்வித்துறை விளக்கம்!

0
பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், வகுப்பறைக்குள் அனுமதிக்கலாமா? கல்வித்துறை விளக்கம்!
பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், வகுப்பறைக்குள் அனுமதிக்கலாமா? கல்வித்துறை விளக்கம்!

பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள், வகுப்பறைக்குள் அனுமதிக்கலாமா? கல்வித்துறை விளக்கம்!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவாகரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்குள்ள சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை விளக்கம் தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிதல்:

கர்நாடக மாநிலத்தில் சில பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதிக்கப்பட்டது. அதனால் முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களின் உடை விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் தலையீடுவதாக வழக்கு ஒன்றை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் தாக்கல் செய்தனர். இதனால் இந்து மற்றும் முஸ்லீம் மாணவர்களிடைய கலவரங்கள் ஏற்பட்டது. அதனால் கலவரத்தை கட்டுப்படுத்த சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு பயிலும் மாணவி வகுப்பறைக்குள் தலையில் அணியும் ஹிஜாபை அணிந்து வந்தார்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

இதனை அகற்றி விட்டு வகுப்பறைக்குள் வர வேண்டும் என்று பள்ளி முதல்வர் கூறியதாக புகார் வந்துள்ளது. அதனால் பல்வேறு தரப்பினர் மாணவிக்காக பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். இதற்கு பள்ளி முதல்வர் பதில் கூறியதாவது, வகுப்பறையில் மாணவர்களிடையே பிரிவினை வரக்கூடாது அதனால் ஹிஜாபை அணிந்து வர கூடாது என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடை நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

வார விடுமுறைகள், மாத சம்பளத்தில் மாற்றங்கள் – மத்திய அரசின் புதிய ஊதியக் குறியீடு கொள்கை 2022!

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போது மாணவியை ஹிஜாப் அணிந்து வரலாம் என்று முதன்மைக் கல்வி அலுவலர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக ஆளுநர் தமிழிசையிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, புதுச்சேரியில் மாணவர்களுக்கான சீருடை பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுக்கும். இதையடுத்து வழக்கமாக மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தவுடன் அவர்கள் தனியறைக்கு சென்று சீருடை அணிந்து வகுப்பறைக்குள் வருவருவது வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகார்களை முதல்வர் ரங்கசாமியிடம் பல்வேறு தரப்பினர் கொடுத்துள்ளனர். இதற்கு தகுந்த விசாரணை மேற்கொண்டு அதன்பின் முடிவுகளை அரசு தெரிவிக்கும் என்றும் அத்துடன் இதுபோன்ற நிலை இனி உருவாகாது என்று முதல்வர் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!