தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி? ஜூன் 30 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய எப்படி விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை பற்றி பார்ப்போம்.
அரசு உதவித்தொகை
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டு வருகிறது. அதனால் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முன்பதிவு தொடக்கம்!
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12000 ரூபாய் வரை மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சுமார் 6 லட்சம் மாணவிகள் வரை பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு செலவுத் திட்டத்தில் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் மாணவிகள் penkalvi.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களின் நகலை கல்லூரிகளில் சமர்ப்பித்து பதிவு மேற்கொள்ளலாம். அத்துடன் மொபைல் அல்லது கணினி வாயிலாகவும் மேற்கண்ட ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும் இதற்கு பதிவு செய்யலாம்.