தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்!
தமிழகத்தில் இன்று 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள பக்கத்தில் இருந்து மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மதிப்பெண் சான்றிதழ்:
தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு 2022 – 2023 ம் கல்வியாண்டில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்த நிலையில் 10,11 ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு கடந்த மார்ச் மாதம் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. பொதுத்தேர்வை முன்னிட்டு விரைந்து பாடங்களை நடத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டது. அதன் பிறகு கால அட்டவணையின் படி கடந்த மே மாதம் தேர்வுகள் தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 20ம் தேதி பொதுத்தேர்வில் முடிவுகள் வெளியிடப்பட்டது. 10ம் வகுப்பில் 90.07% பேரும் 12ம் வகுப்பில் 93% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Exams Daily Mobile App Download
அடுத்ததாக 12ம் வகுப்புக்கு ஜூலை 25ம் தேதி துணைத்தேர்வு தொடங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அறிவித்தபடி இன்று 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்தவர்கள் அடுத்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அவசியமாகும். எனவே மாணவர் சேர்க்கைக்கு ஏதுவாக அரசு தேர்வுகள் இயக்ககம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அசல் சான்றிதழ் வழங்க சில மாதங்கள் ஆகும் என்பதால் தற்போதைக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மாணவர்கள் கல்லூரிகளில் சேரலாம். மாணவர்கள் , https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை தொடர்ந்து மறுகூட்டல், விடைத்தாள் நகல் ஆகியவற்றுக்கு ஜூன் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.