தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் புதிதாக மின்னணு குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு, அவர்களின் வீடு தேடி வந்து கார்டுகளை விநியோகம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மின்னணு குடும்ப அட்டைகள்
மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழங்கப்படும் மின்னணு குடும்ப அட்டைகள் ஒவ்வொரு தனி நபருக்கும் அடையாள ஆவணமாகவும், அரசு தரும் மானிய விலையிலான பொருட்களை பெற்றுக்கொள்ளவும் பயன்படுகிறது. இந்த குடும்ப அட்டைகள் இருந்தால் தான் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களையும், இலவச சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். இந்த கார்டுகள் முன்பு காகித வடிவில் இருந்தது. ஆனால் இப்போது இந்த குடும்ப அட்டைகள் அனைத்தும் ஸ்மார்ட் சிஸ்டத்தின் படி மின்னணு முறையில் வழங்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த மின்னணு குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட அட்டை தொடர்பான அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இந்த மின்னணு குடும்ப அட்டையை நாம் ஆன்லைன் மூலமாகவோ அல்லது வட்டாட்சியர் அலுவலகங்களில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் இந்த சேவைகளை பயன்படுத்தி புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் வீடு தேடி வந்து இந்த கார்டுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்கள் விடுமுறை? பொருளாதார நெருக்கடி எதிரொலி!
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், தமிழகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அஞ்சல் மூலம் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக, குடும்ப அட்டைகளை அஞ்சல் வழியாக பெற விருப்பம் தெரிவிக்கும் வசதி இணையதளத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.