தமிழகத்தில் மார்ச் 26, 30ம் தேதிகளில் விடுமுறை – கூட்டுறவு சங்கத்திற்கு முக்கிய அறிவிப்பு!
பெருந்துறை வேளாண் துறை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வருகிற 26 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதி அன்று நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலம், ஆண்டு கணக்கு இறுதி செய்யும் பணியால் நடைபெறாது எனவும் ஏலத்திற்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் முதல் நாள் அனைத்து வணிக நிறுவனங்களிலும் புது கணக்கு தொடங்கப்படும். அதனால் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வருகிற மார்ச் 26, 30 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கும் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலை முந்திய ‘பாக்கியலட்சுமி’ – ட்விஸ்ட் கொடுத்த TRP ரேட்டிங்!
பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வழக்கமாக புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த மாதம் 26, 30 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய கணக்கு தொடங்கப்பட இருப்பதால் இங்கு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் அந்த நாட்களில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று வழக்கம் போல ஏலத்திற்கு தேங்காய் பருப்பு மூட்டைகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை, ஏலக்கிடங்கில் தேங்காய் பருப்புகளை இறக்கி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 04294-220524 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அல்லது 9677883302 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.