தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (மார்ச் 18) பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு! மாணவர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
உள்ளுர் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலத்தில் ஒரு விழாக்களும் நடைபெறாமல் இருந்தது. இது மட்டுமல்லாமல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடந்த பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வருடம் இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த நிலையில் தமிழகத்தில் போடப்பட்டு இருந்த ஊரடங்கில் இருந்து பல தளர்வுகள் அறிவிக்க பட்டது. மேலும் தற்போது பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொது தேர்வுகள் நடத்தாமல் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த வருடம் கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான தேதியையும் அறிவித்து உள்ளார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
LIC பாலிசிதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மார்ச் 25-ஆம் தேதி வரை காலஅவகாசம்!
இந்த நிலையில் தற்போது தமிழக மக்களால் கொண்டப்படும் முக்கிய திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழா உள்ளது. இந்த முக்கிய திருநாள் அன்று தான் பரமேஸ்வரன் பார்வதியையும், ராமன் சீதையையும், முருகன் தெய்வானையையும் ஆகிய தமிழ் மக்களின் முக்கிய தெய்வங்களுக்கு திருமணம் முடிந்ததாகவும் வரலாறு கூறி உள்ளது. இது தவிர தமிழ் கடவுளான முருகனுக்கு அவரது அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களில் தேர் திருவிழா ஆண்டுதோறும் அமோகமாக நடைபெறும். இதற்காக விரதமிருந்த பக்தர்கள் பால், பன்னீர், பூ காவடிகளை ஏந்தி முருகனின் கோவில்களுக்கு பாதயாத்திரை சென்று வழிபாடு செய்வார்கள்.
கொரோனா பணியாளர்களுக்கான நிலுவை சம்பளம் எப்போது? வட்டார அலுவலர் தகவல்!
இந்நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவானது இம் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ராமேஸ்வரம் பரமக்குடி குயவன்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் முருகன் கோவில்கள் அதிக அளவில் உள்ளது. அதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடுவர். இந்த இரு மாவட்டங்களிலும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வருவர். இதனால் மக்களின் நலன் கருதி கூட்டத்தை கட்டுப்படுத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை கொடுத்து உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது ராமநாதபுரம் மாவட்ட மக்களும் மார்ச் 18 அன்று மட்டும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.