தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் ஜனவரி 15, 17,18 ஆகிய தேதிகளில் அரசு மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை:

தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பார்வையை தடுக்கும் நடவடிக்கையாக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. பொங்கல் பண்டிகையில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் பக்தர்கள் கோயிலுக்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி பிக் பாஸ் வீட்டில் ரீஎன்ட்ரி கொடுத்த ப்ரியங்கா – கோலாகல பொங்கல் கொண்டாட்டம்! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த நிலையில் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும். அப்போது தான் அரசு எடுக்கும் முழு முயற்சியும் பயனளிக்கும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் ஜனவரி 15, 17,18 ஆகிய தேதிகளில் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 18ம் தேதி வடலூா் இராமலிங்கா் நினைவு தினம் மற்றும் ஜன. 26 ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய தினங்களை முன்னிட்டு முன்னிட்டு, அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 – முதல்வர் ஜாக்பாட் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து மதுக்கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் மற்றும் உரிமம் உள்ள ஹோட்டல்களில், மதுபானம் மற்றும் பீா் வகைகள் விற்பனை நடைபெறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி விற்பனையில் ஈடுபடும் மேற்பாா்வையாளா் கள் மற்றும் விற்பனையாளர்கள், பாா் உரிமையாளர்கள் ஆகியோர்கள் மீது மதுபான சில்லறை வா்த்தக சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கரூா் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!