தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு ஏப்ரல் 11ம் தேதி விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேரோட்ட விழாவினை முன்னிட்டு வரும் ஏப்ரல் 11ம் தேதி விடுமுறை என்ற அறிவிப்பினை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலின் காரணமாக மாணவர்களின் உடல் நலன் கருதி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் ஒரு சில தளர்வுகளுடன் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தின் பல பகுதிகளில் தளர்வுகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதே போல கோவில் விழாக்கள் நடைபெறவும் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவினை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏப்ரல் 7 க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
ஒவ்வொரு வருடமும் இந்த விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேரோட்ட விழா நடைபெற இருப்பதால் மக்கள் பலரும் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த திருவிழாவில் கீரனூர், குளத்தூர், அன்னவாசல், இலுப்பூர், நார்த்தாமலை உள்ளிட்ட கிராம மக்களும் கலந்து கொள்வர். கோயில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் வழிபாடு செய்வர்.
இந்த ஆண்டு எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மக்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேரோட்ட விழா ஏப்ரல் 11ம் தேதி விமர்சையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.