ஏப்ரல் 7 க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

0
ஏப்ரல் 7 க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
ஏப்ரல் 7 க்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா? மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 2 ஆம் தேதி வன்முறை வகுப்புவாத மோதல்கள் நடந்ததை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 7 ஆம் தேதியான இன்று நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டிருந்தது. இதற்கான உத்தரவை கரௌலி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

ராஜஸ்தானின் கரௌலியில் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் நடந்த அசாம்பவீதங்களை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 7 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பிரித்துள்ளார். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 7 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கரௌலி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ஷெகாவத், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தபோது, தற்போதைய சூழ்நிலைகள் “சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு இயல்பானவை அல்ல” என்று கூறினார்.

Ashok Leyland சென்னை வேலைவாய்ப்பு 2022 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!

இருப்பினும், தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தளர்வுகள் செய்யப்படுகின்றன, அவர்கள் அனுமதி அட்டையைக் காட்டிய பிறகே தேர்வு மையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், மக்கள் வெளியே செல்லவும் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் இரண்டு மணி நேரம் தளர்வு வழங்கப்படும் என்றும், நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு மேலும் தளர்வுகள் வரும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். நவ் சம்வத்சரை (இந்து புத்தாண்டு) கொண்டாடும் மோட்டார் சைக்கிள் பேரணி, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி வழியாக சென்றபோது, கற்களால் வீசப்பட்டதை அடுத்து வகுப்புவாத மோதல்கள் வெடித்தன.

வன்முறை விரைவாக அதிகரித்தது, கடைகள் மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்டன, காவல்துறையின் அறிக்கையின் படி சுமார் 35 பேர் இதனால் காயமடைந்தனர். விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP), ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) மற்றும் பஜ்ரங் தளம் போன்ற இந்து அமைப்புகளின் உறுப்பினர்களால் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வன்முறையை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, மொபைல் இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன மற்றும் 50 அதிகாரிகள் உட்பட 600 போலீசார் நகரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

8 ஆம் வகுப்பு படித்தவருக்கு ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

மேலும், லக்னோவில் இருந்து மூன்று இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) அதிகாரிகள் கரௌலிக்கு அனுப்பப்பட்டனர். இந்த மோதலுக்கு பின்னர் நகரில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்று இரவுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதன்பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்று தகவல் வெளியாகவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!