பிப்ரவரி 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 20ம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அந்த ஒரு நாள் மட்டும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்று ஓய்ந்திருக்க கூடிய சூழலில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனுடன் அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்கும் கூட அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டில் ஹிமாச்சல் பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
IPL 2022: மெகா ஏலத்தில் கேப்டனை தேடும் 3 அணிகள் – ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு!
அதே போல தமிழகத்திலும் கூட பிப்ரவரி 19ம் தேதியன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நாளில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசு நேற்று (பிப்.10) தெரிவித்துள்ளது.
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மாநில அரசு அறிவிப்பு!
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கு பிப்ரவரி 20 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இப்போது மாநிலம் முழுவதும் உள்ள வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனம் அல்லது வேறு ஏதேனும் ஒரு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் மற்றும் தேர்தலில் வாக்களிக்க உரிமையுள்ள அனைவருக்கும் வாக்குப்பதிவு தேதியன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.