தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை - நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை - நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பு!

தமிழகத்தில் 9 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே 1 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் தற்போது 9ம் வகுப்பிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேரடி வகுப்புக்கு தடை:

தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையிலும் மாணவர்களின் கல்வி நிலையை கருதி கொண்டு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் முதல் கட்டமாக 9 – 12ம் வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. கடந்த மாதம் 1ம் தேதி முதல் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது.

தமிழகத்தில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு – ஜன.6 முதல் அமல்! அரசு அறிவிப்பு!

நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்ததால் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை 9 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் ஜனவரி 3 முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் ஓமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியது. மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகிறது.

அதனால் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. 9 – 12 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அரசு நோய்த்தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் 15 – 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!