ஜூலை 9 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – கனமழை எதிரொலி!
கோவா மாநிலத்தில் நேற்று (ஜூலை 7) முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு அடுத்த 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, அசாம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. தவிர இந்த கனமழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலோர மாநிலமான கோவாவில் தற்போது கனமழை பெய்து வருவதை கவனத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு பிற்பாடு, கோவாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடலோர மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில கல்வி இயக்குனர் ஷைலேஷ் ஜிங்டே தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடர்பான நிலைமையை கண்காணித்து, விடுமுறையை நீட்டிக்கலாமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவாவிற்கு உதவியாக கடை வேலைகளை பார்க்கும் தனம், ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்த கதிர் – இன்றைய எபிசோட்!
மறுபக்கத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கோவாவில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் ஜூலை 9 முதல் 10 வரை மிக கனமழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது. இது தொடர்பாக மாநில தகவல் மற்றும் விளம்பரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், கனமழையால் ஏற்படும் எந்த சூழலையும் சமாளிப்பதற்கும் கள இயந்திரங்களை செயல்படுத்த வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.