தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை – அரசு அறிவிப்பு !
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தீவிரம் எடுப்பதால் பள்ளி மாணவர்களின் நலன் அடிப்படையில் நாளை முதல் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உறுதி செய்யப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா ஆகியவற்றில் புத்தாண்டு முதலே கொரோனா நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இந்த வகையில் எந்த ஒரு கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – வாரத்தில் இரண்டு நாள் முழு ஊரடங்கு! அரசு திட்டம்?
இதனை தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி வார இறுதி நாட்களில் தவறாமல் நடைபெற்று வருகிறது. தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை கொரோனா தடுப்பு விதிமுறை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற விதிமுறைகள் பொது இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 18 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசின் உத்தரவை எதிர்த்து பெற்றோர்கள் கோரிக்கை!
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதுவோர்களான 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்பு கொரோனா அதிகரித்து வருவதால், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஜன 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜன.19ல் தொடங்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த வகையில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா தொற்று குறைய வாய்ப்பு உள்ளதாக அரசு கூறியுள்ளது.