சபரிமலை கோயில் பாதையில் மருத்துவ வசதி – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
கேரள மாநிலத்தின் பிரபல சபரிமலை ஐயப்பன் கோயில் பாதைகளில் மருத்துவ வசதி குறைபாடு காரணமாக மற்றும் பல புகார்கள் வந்துள்ள நிலையில், அவற்றை பற்றி விசாரித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு:
கேரளா மாநிலத்தில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் நாடு தென்னிந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த ஆண்கள் வந்து தரிசனம் செய்வார்கள். ஆனால் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நாடாகும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கு வழக்கத்தை விட அதிக பக்தர்கள் வருவார்கள். அதிக அளவில் பக்தர்களின் எண்ணிக்கை உள்ளதால் அவர்களின் அவசர தேவைகளுக்கு என்று அடிப்படை வசதிகளை அமைக்க முன்னதாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சபரிமலை பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, தேவையான எண்ணிக்கைக்கு பேருந்துகள் இல்லை.
பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
கோயிலுக்கு செல்லும் நீலிமலை, அப்பாச்சிமேடு பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறித்தும் புகார்கள் இருந்து வந்தது. இந்த புகார்கள் அனைத்தும் சபரிமலை சிறப்பு ஆணையர் அவர்கள் தாக்கல் செய்த மனுவின் மூலமாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த அறிக்கைகளை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வழக்கின் விசாரணையில் அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டது. இதனால் மாநில உயர்நீதிமன்றம் கேரள அரசு பதில் அளிக்க வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளது.
‘ஒமிக்ரான் குறித்து அச்சப்பட வேண்டாம், முகக்கவசங்களை அணிந்திருங்கள்’ – முதல்வர் வலியுறுத்தல்!
அதன்படி, நீலிமலை, அப்பாச்சிமேடு பகுதிகளில் உள்ள மருத்துவ சிகிச்சை மையங்களில் போதிய அளவில் இதய சிகிச்சை நிபுணர்கள், மருத்துவர்கள் அமைக்க வேண்டும். மலையேற்றப் பாதைகளில் போதிய அளவில் அவசர உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், நிலக்கல்லில் கொரோனா சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அதிக அளவில் அமைக்க வேண்டும், பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார்கள் குறித்தும் கேரளா அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.