பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
புகழ்பெற்ற திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக துண்டு பிரசுரங்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். இவ்வாறு பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அறிவித்து வந்தது. அதில் குறிப்பாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. அதில் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் தற்போது சில தளர்வுகளை அந்தந்த மாநில அரசு அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பருவ மழைக்காலம் காரணமாக திருப்பதியில் தொடர்ந்து கனமழை ஏற்பட்டது. இதனால் திருப்பதி தேவஸ்தானம் முழுவதும் மழை நீரால் சூழ்ந்து காணப்பட்டது.
‘ஒமிக்ரான் குறித்து அச்சப்பட வேண்டாம், முகக்கவசங்களை அணிந்திருங்கள்’ – முதல்வர் வலியுறுத்தல்!
அதை தொடர்ந்து கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மழை நீர் குறைந்ததை அடுத்து கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடத்தப்படுவதாகவும், எவ்வளவு வேலை காலியாக உள்ளது. வேலைக்கு ஏற்ற சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றன. இதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கடந்த ஆண்டு தேவஸ்தானத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் பணமோசடி செய்ததாகவும் கூறுகின்றன.
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.07) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
தேவஸ்தானத்தில் காலி பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்திருந்தால் முன்பாகவே பத்திரிகை மற்றும் தேவஸ்தான இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இது போன்ற பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையில் நேற்று மட்டும் 28,476 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும் 13,208 பேர் முடிகாணிக்கை செலுத்தியுள்ளன. அதனை தொடர்ந்து ரூ.2.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்றும் தெரிவித்துள்ளன.