மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் சம்பள உயர்வு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஹோலி பண்டிகைக்கு முன், அதாவது மார்ச் மாதத்திற்குள் சம்பளத்தில் பெரிய உயர்வு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு
மிக விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது அடுத்த மார்ச் மாதம் வரவிருக்கும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, 18 மாதங்களுக்கான அகவிலைப்படி (DA) நிலுவைத் தொகை கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு, தற்போதுள்ள ஜனவரி மாத தவணையுடன் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 வீதமாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி தொகை 34% ஆக அதிகரிக்கவுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
இப்போது AICPI புள்ளி விவரங்களின் படி, டிசம்பர் 2021க்கான குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்து தற்போது 351.33 ஆக உள்ளது. இதன்படி, ஊழியர்களின் அகவிலைப்படி தொகை இந்த ஆண்டு 34.04 சதவீதமாக அதிகரிக்கலாம். அதன் படி DA தொகை 34 சதவீதமாக இருக்கும். இதற்கிடையில் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 எனில், 34 சதவீதம் அகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டு சம்பளம் ரூ.73,440 ஆக அதிகரிக்கலாம். அதே நேரத்தில், ஆண்டு ஊதிய உயர்வு ரூ.6,480 ஆக இருக்கும்.
இது தொடர்பான ஊடக அறிக்கைகளின்படி, மார்ச் மாதத்தில் DA அதிகரிப்பு இருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது, 18 மாத DA நிலுவைத்தொகை பற்றி பேசுகையில், JCM செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, மத்திய அரசு DA பணத்தை ஒரே முறையில் செட்டில்மென்ட் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு, விரைவில் அமைச்சரவை செயலாளருடன் விவாதிக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.