தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 19ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளர்த்தால் தமிழக பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கான விடுமுறையை அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா மற்றும் அதன் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஜனவரி மாதம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட இருப்பதாக அரசு அறிவித்திருந்த நிலையில் தான் கொரோனா 3ம் அலை தாக்கத்தின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு, பிப்.19ம் தேதி பொது விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் அப்டேட்ஸ்!
நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்னர் பிப்ரவரி 1ம் தேதி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் பிப்ரவரி 19ம் தேதியான சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ம் தேதி அன்று நடக்கிறது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை தமிழகத்தில் உள்ள 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் 19ம் தேதி விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதனுடன் 50%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தால் அந்த பள்ளிகளுக்கு 18ம் தேதியும் சேர்த்து விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது அறிவிப்பில் முன்னதாக தேர்தல் வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. அன்று அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் தமிழக பள்ளி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.