மாநில அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக 3% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!
ஒடிசா மாநில அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் DA மற்றும் DR தொகையை 31% ஆக உயர்த்தி அறிவித்துள்ள அரசு DA நிலுவைத்தொகை குறித்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
DA உயர்வு
கடந்த ஆண்டின் கடைசி மாதங்களில், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு, நிலுவைத்தொகை, சம்பளத்தில் ஏற்றம் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இப்போது இந்த வரிசையில், ஒடிசா மாநில அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக சில அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் DA மற்றும் DR தொகை மீண்டும் 3% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இனி முல்லையாக புதிய நடிகை அறிமுகம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
இந்த அறிவிப்புக்கு பிறகு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு 31% DA தொகை உயர்த்தப்பட்ட பிறகு ஒடிசா மாநில அரசும் ஊழியர்களின் DA மற்றும் DR தொகையை உயர்த்தியுள்ளது. இப்போது ஒடிசா ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களைப் போலவே 31% DA மற்றும் DR நன்மைகளைப் பெறுவார்கள். அந்த வகையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் இந்த முடிவால் மாநிலத்தில் உள்ள சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தவிர 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களுக்கு 30 சதவீத நிலுவைத் தொகையை வழங்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜனவரி 2016 மற்றும் ஆகஸ்ட் 2017 க்கு இடையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தில் 50 சதவீத நிலுவைத் தொகையை ஊழியர்கள் பெறுவார்கள். இந்த முடிவால் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களின் DA தொகையானது மீண்டும் ஒருமுறை உயர்வை காணும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
அடுத்த 50 மணி நேரத்திற்கு வார இறுதி முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
இது தொடர்பான AICPI குறியீட்டின் தரவுகளின் படி, செப்டம்பர் 2021 வரை, அகவிலைப்படி தொகை 33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்படி 2 சதவீதம் DA உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இது மேலும் 1 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 2021க்குள் CPI (IW) எண்ணிக்கை 125 ஆக இருந்தால், அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு உறுதி. அதாவது மொத்த DA தொகை 3% என்ற வகையில் 34% வரை அதிகரிக்கும். இது ஜனவரி 2022 முதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்