அடுத்த 50 மணி நேரத்திற்கு வார இறுதி முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி? முழு விவரம் இதோ!
டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் ஜனவரி 1 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவின் படி நேற்று (ஜன.14) இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை (ஜன.17) அதிகாலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
ஊரடங்கு அமல்
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தேசிய தலைநகரில் விதிக்கப்பட்ட வார இறுதி ஊரடங்கு உத்தரவு நேற்று (ஜன.14) இரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் அடுத்த 55 மணி நேரத்திற்கு, அதாவது ஜனவரி 17ம் தேதி காலை வரை அமல்படுத்தப்பட இருக்கும் இந்த முழு முடக்கத்தில் அனைத்து அத்தியாவசியமற்ற செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி வெளியிட்டுள்ள தனது உத்தரவின் படி, இன்று (ஜன.14) இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஊரடங்கு குறித்து கடந்த வாரம் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் வார இறுதியில் (ஜனவரி 15-16) மெட்ரோ ரயில் சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று டெல்லி மெட்ரோவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, ஊரடங்கு உத்தரவின் போது மெட்ரோ சேவைகள் மற்றும் பொது போக்குவரத்து பேருந்துகள் முழு இருக்கை வசதியுடன் இயங்கும். ஆனால் நிற்கும் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் ‘மஞ்சள் கோடு’ கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள ஹுடா சிட்டி சென்டர் முதல் சமய்பூர் பட்லி மற்றும் ‘ப்ளூ லைன்’ வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வழித்தடங்களிலும் 20 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தல அஜித்தின் தங்கையா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
தொடர்ந்து அத்தியாவசிய சேவைகளுக்காக கடந்த வாரம் வழங்கப்பட்ட இ-பாஸ்கள் ஊரடங்கு உத்தரவின் போது செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், மருந்துகள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை கையாள்பவர்களை தவிர்த்து வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது மற்ற அனைத்து சந்தைகளும் மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.