மத்திய அரசு ஊழியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வு – யாருக்கெல்லாம் பலன்?முழு விவரம் இதோ!
சமீபத்தில் வெளிவந்துள்ள 7வது சம்பள கமிஷனின்படி, மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு மீண்டும் 14 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 10 மாத நிலுவைத் தொகையும் அவர்களுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) ஒரே நேரத்தில் சுமார் 14 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ரயில்வே ஊழியர்களுக்கான அரசாணையை வெளியிடும் போது, ஊழியர்களுக்கு 10 மாத நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இது தவிர 14 சதவீத அகவிலைப்படி உயர்வை, ரயில்வே வாரியம் இரண்டு பகுதிகளாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில், ஜூலை 1, 2021 முதல் அகவிலைப்படி தொகை 7 சதவீதமும், ஜனவரி 1, 2022 முதல் DA தொகை 7 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு முதல் 7 சதவீத உயர்வு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 189 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் DA தொகை 196 சதவீத அடிப்படையில் மட்டுமே அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2022 ஜனவரி 1 முதல் 7 சதவீத அதிகரிப்புடன் ஊழியர்களுக்கு மொத்த DA, 203 சதவீதமாக உயரும்.
இந்த இரண்டு உயர்வுகளையும் இணைத்து, ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் 10 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், ஊழியர்களுக்கு டிஏ உயர்வு மற்றும் 10 மாத நிலுவைத் தொகையை ஒரே நேரத்தில் கிடைத்தால் அவர்களின் சம்பளத்தில் பெரிய உயர்வு ஏற்படும். இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 30 அன்று, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி தொகையை அரசு 3% ஆக உயர்த்தி அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் டிஏ 31%க்குப் பதிலாக 34 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.