Post Office இல் அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டம் – பணம் இரட்டிப்பு! முழு விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை முதலீட்டின் மூலம் லாபம் மாதந்தோறும் லாபம் தரும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 10 ஆண்டுகளில் பணம் இரட்டிப்பாகும் திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.
கிஷான் விகாஷ் பத்ரா திட்டம்:
இந்திய தபால் துறையின் சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி வழங்கப்படுகிறது சேமிப்புடன் கூடுதல் வட்டியும் கிடைப்பதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அஞ்சலக திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வட்டி விகிதங்கள் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. தற்போதைய சூழலில் பங்கு சந்தை மற்றும் பிற தொழில்களில் முதலீடு செய்வது முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் மக்கள் பாதுகாப்பான மற்றும் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய செய்ய விரும்புகின்றனர். இந்த நபர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் சிறந்த தேர்வாகும்.
மற்ற திட்டங்களை தொடர்ந்து கிஷான் விகாஷ் பத்ரா திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு இந்திய குடிமகனும் சேரலாம். இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் ரூ. 1000 செலுத்தி கணக்கு தொடர வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. உங்களது பணம் 124 மாதங்களில் ரூ.2 லட்சமாக உயரும். இதில் 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை நீங்கள் கொடுக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் அட்ரஸ் திருத்தம் செய்யும் வழிமுறைகள் – UIDAI அறிவிப்பு!
மேலும் குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர்கள் மற்றும் காப்பாளர்கள் கூட இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் கணக்கு தொடரும் நபர் இறந்தால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட நாமினிக்கு முதிர்வு தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் ஆன பிறகு கணக்கு தாரர் விருப்பபட்டால் சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தில் கடன் வசதியும் உண்டு மற்ற கடன் திட்டங்களோடு ஒப்பிடுகையில் வட்டி விகிதமும் மிகவும் குறைவு.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்