தமிழகத்தில் நாளை (ஆக.23) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!
விருதுநகர் மாவட்டம் அரங்கு துணை மின் நிலையத்தில் பகுதி துணை மின் நிலையத்தில் நாளை (23.08 .2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லாமல் எவ்வித வேலைகளையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் கிராம பகுதிகளில் மின் வசதி குறைவாக இருக்கும். தற்போது அனைவரும் மின் இணைப்பு பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு மின்தேவை அதிகமாக உள்ளது. அதனால் மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதனை தொடர்ந்து பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகளும் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடியும்வரை மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்கள் பாதுகாப்பிற்காகவும் பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை திருச்சி மாவட்டம் அரங்கு துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
Post Office ல் பெண் குழந்தைகளுக்கு முதலீடு செய்தால் ரூ. 64 லட்சம் வரை லாபம் – முழு விவரம் இதோ!
அதனால் ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கஸ்தூரிபாய் ரோடு, ரோசல்பட்டி, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி சாலை, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, பேராலி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, தந்தி மர தெரு, எல்.ஐ.ஜி. காலனி, கல்லூரி சாலை, ரயில்வே பீடர் ரோடு, மெயின் பஜாரில் வடக்கு பகுதி, காந்திபுரம் தெரு, காசுக்கடை பஜார், மணி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்