பிப்ரவரி 6ம் தேதியன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – அரசு அனுமதித்துள்ள தளர்வுகள் இதோ!

0
பிப்ரவரி 6ம் தேதியன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல் - அரசு அனுமதித்துள்ள தளர்வுகள் இதோ!
பிப்ரவரி 6ம் தேதியன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல் - அரசு அனுமதித்துள்ள தளர்வுகள் இதோ!
பிப்ரவரி 6ம் தேதியன்று ஞாயிறு முழு ஊரடங்கு அமல் – அரசு அனுமதித்துள்ள தளர்வுகள் இதோ!

கேரளா மாநிலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கட்டுப்படுத்த அடுத்து வரும் பிப்ரவரி 6ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா 3ம் அலைப்பரவல் தீவிரமாக பரவிக்கொண்டிருக்க கூடிய நிலையில் கேரளா அரசு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு மூலம் கொரோனா தொற்றின் நிலைமை மேம்பட்டு வருவதால் இந்த கட்டுப்பாடுகளை வரும் ஜனவரி 6ம் தேதியன்றும் தொடர மாநில அரசு முடிவு செய்துள்ளது. என்றாலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இம்முறை சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கடந்த 2 வார ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டதை போல, அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின் போது அவசியமற்ற போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்று அரசு தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும் அவசரகாலப் பயணம் மட்டுமே அனுமதிக்கப்படும். அப்போது, பயணிகள் அவசர நிலையை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோக பத்திரிகை – வைரலாகும் பதிவு! கலாய்த்த நெட்டிசன்கள்!

இப்போது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தாலும், மாவட்டங்கள் தோறும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கேரளா மாநில அரசு அனுமதித்துள்ள சில செயல்பாடுகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம். அந்த வகையில் முதலாவதாக,

தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வலியுறுத்தல்!

  • திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 20 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய சேவைகளான பால், செய்தித்தாள், மீன், இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அவசிய பணிகளான காவல்துறை, தீயணைப்பு துறை, பத்திரிக்கை, சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்களது அனுமதி அட்டைகளுடன் பயணிக்கலாம்.
  • பத்திரிக்கை துறை, மருந்து கடைகள், டெலிகாம் மற்றும் இணைய அடிப்படையிலான பணிகள் முழு நேரமும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • தொலைதூர பேருந்து மற்றும் ரயில் பயணங்கள் அனுமதிக்கப்படுகிறது.
    மருத்துவனைகளுக்கு செல்பவர்கள், தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தலாம்.
  • மதுபான கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!