தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வலியுறுத்தல்!

0
தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அமைச்சர் வலியுறுத்தல்!
தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு - அமைச்சர் வலியுறுத்தல்!
தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று முதல் (பிப்.1) பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தடுப்பு நெறிமுறைகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 23,000 ஐ நெருங்கியது. இதனை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் தழுவிய முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் இந்த மோசமான நிலையை எண்ணி 1-12ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தடுப்பு பணியின் ஒரு பகுதியாக தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் அரசு ஊரடங்கை ரத்து செய்தது. இதனையடுத்து இன்று தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு, பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

IPL 2022: 10 அணிகள், 590 வீரர்கள் – சூடுபிடிக்கும் ஏலம்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

வழிகாட்டு நெறிமுறைகள்

  • மாணவர்கள் கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக பள்ளி நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கு வளாகத்தின் நுழைவு வாயிலே உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • வகுப்பறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் இருக்கைகள் இடம் விட்டு போட வேண்டும்.
  • மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தொற்று அறிகுறி உள்ள மாணவர்களுக்கு உடனடியாக தொற்றுப் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • 5 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய மாணவர்களும், ஆசிரியர்களும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!