தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் நலனிற்காக உதவி அலைபேசி எண் – காவல்துறை வெளியீடு!
தமிழக காவல்துறையானது வெளிமாநிலங்களில் இருந்து வந்த புலம் பெயர்ந்தவர்கள் நலனிற்காக உதவி அலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது.
உதவி அலைபேசி
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை வாய்ப்பிற்காக தமிழகம் வந்து தங்குகின்றனர். அவர்கள் கட்டிட வேலை, பானிபூரி கடைகள், துணிக்கடைகள் என சிறு சிறு தொழில் செய்து அன்றாடம் சம்பாரித்து வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக இருக்கிறது. மேலும் பல இடங்களில் வெளி மாநிலத்தவர்கள் நடத்தப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் பல புகார்கள் வருகின்றன.
தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம்! வெளியான அப்டேட்!
அதனால் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவலை சேகரிக்க வேண்டும் என காவல்துறை ஏற்கனவே உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் காவல்துறையில் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறை சார்பில் உதவி அலைபேசி எண் வெளியிட்டுள்ளது. அதன்படி 0421-2203313, 9498101300, 9498101320 என்ற தொலைபேசி எண்களில் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.