தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. அத்துடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இன்றைய வானிலை நிலவரத்தை பற்றி சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இன்று முதல் வருகிற 14ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளுக்கான முக்கிய எச்சரிக்கை – போலீசார் அறிவிப்பு
Exams Daily Mobile App Download
மேலும் தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதிகளில் இருக்கும் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.