தமிழக பள்ளிகளுக்கான முக்கிய எச்சரிக்கை – போலீசார் அறிவிப்பு!
தமிழகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகள் அருகே போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
போதை பொருள் தடுப்பு:
தமிழகத்தில் நடந்து வரும் பல அசம்பாவித சம்பவங்களுக்கும் முக்கிய காரணமாக போதை பொருள்கள் இருக்கிறது. இந்நிலையில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனை செய்ய கூடாது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி அருகே குட்கா, போதை மாத்திரை உள்ளிட்டவைகள் விற்கப்படுகிறதா என அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட போலீசார் மற்றும் துணைபோலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும், இது குறித்து ரகசிய விசாரணையில் தகவல் தெரிந்தால் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காவல்துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
TNPSC குரூப் 7 & 8 தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.13) ஆன்லைன் மாதிரி தேர்வு
Exams Daily Mobile App Download
மேலும் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் துளி கூட கஞ்சா இருக்கக் கூடாது. கஞ்சா, போதை பொருள் இல்லாத மாவட்டமாக திருப்பத்தூர் திகழ வேண்டும். பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் புகார் குறித்து ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.