வங்க கடலில் நிலைகொண்டுள்ள புதிய புயல் – தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை அலர்ட்:
தமிழகம் முழுவதும் பருவமழை காலம் ஆரம்பித்து தொடர்ந்து பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர் வரத்தினால் அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்படுவதால், தென் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இது மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதிவாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்ற எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி 2 நாள் சுற்று பயணம் – குஜராத்தில் Mission Schools of Excellence பள்ளி திறப்பு!
Exams Daily Mobile App Download
இதனால் நாளை முதல் ஞாயிற்று கிழமை வரை தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஈரோடு, சேலம், பெரம்பலூர், கடலூர், அரியலூர், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுவையில் கனமழை பெய்ய உள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.