தமிழகத்தில் கொடிய வெப்பத்தை தணிக்க கொட்டித் தீர்க்கும் கனமழை – மகிழ்ச்சியில் மக்கள்!
தமிழகத்தில் நேற்று மற்றும் இன்று கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வெப்பத்தை தணிக்கும் வகையிலான இந்த கொட்டி தீர்க்கும கனமழையினால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கனமழை:
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி பரவலாக பல இடங்களிலும் கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையினால் சில மணி நேரங்கள் போக்குவரத்துகள் ஸ்தம்பிக்கப்பட்டது. தமிழகத்தில் கோடை காலத்தின் இறுதி பகுதியை எட்டியுள்ள நிலையிலும் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவி வருகிறது. வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வகையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் வருவதை தவிர்த்து விடுகின்றனர்.
SSC MTS தேர்வு முடிவுகள் 2023 – இன்று வெளியீடு!
இந்நிலையில் ஆகஸ்ட் 7ஆம் தேதியாகிய நேற்று மற்றும் இன்று மாலை வேலைகளில் பகல் நேர வெப்பத்தை தணிக்கும் வகையில் சில மணி நேரங்கள் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. எதிர்பாராத மழையின் காரணமாக வெப்பநிலை குறைந்து வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.