தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் வெளியிட்ட தகவல்! எச்சரிக்கை மக்களே!
தமிழகம் மற்றும் புதுவையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை தகவல்:
வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் டிச.17 மற்றும் 18ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல் டிச. 19 அன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Follow our Instagram for more Latest Updates
அதனை தொடர்ந்து டிச.20 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அடுத்தாக 21.12.2022 புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறையின் புதிய திட்டம் – மாநகர பேருந்துகளில் இலவச பயணம்.. டிச.21 முதல் அமல்!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.