மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

0
மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி!
மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி!
மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

தெற்கு வங்க கடற்பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் மதுரை, திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

கனமழை:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 1ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டு மழை பொழிவு அதிகமாகவே உள்ளது. இவ்வாறு பெய்து வரும் தொடர் கனமழையால் காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் தாழ்வான சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்தனர்.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு விற்பனை – மொத்த வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!

மாவட்ட நிர்வாகங்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு நிலையை சரி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர பகுதியை நோக்கி சென்றது அதனால் ஆந்திரா முழுவதும் அதிக கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மழை சற்று ஓய்ந்தது. தற்போது தெற்கு வங்க கடற்பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

அஞ்சல் துறையில் 29 காலிப்பணியிடங்கள் – ரூ.34,000 சம்பளம்! விண்ணப்பிக்க டிச.5 கடைசி நாள்!

இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து இன்று மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் வெயில் சுட்டெரித்த நிலையில் தற்போது கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. அதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மற்றொரு புறம் முக்கிய வீதிகளில் மழை ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!