தொடரும் கனமழை…16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒடிசா முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இன்றும் மாநிலத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை:
இன்று காலை 8.30 மணி வரை ஒடிசா மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், நாளை 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலான 33 மணி நேரத்தில் மாநிலத்தில் 50 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தேன்கனல் மாவட்டத்தில் 167 மி.மீ., பாலசோரில் 108 மி.மீ., பலங்கிரில் 103 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? – அரசு ஊழியர்கள் மத்தியில் வலுக்கும் போராட்டம்!
Exams Daily Mobile App Download
இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கரில் மையம் கொண்டுள்ளது. தற்போது, மேற்கு-வடமேற்கு திசையில் பவானிபட்னாவில் இருந்து 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும். கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவு இந்த மாவட்டங்களின் பாதிக்கப்படக்கூடிய மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு அல்லது மண்சரிவுகளைத் தூண்டக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அலை தாக்கம் காரணமாக கடல் கொந்தளிப்பாக உள்ளது. நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்