மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? – அரசு ஊழியர்கள் மத்தியில் வலுக்கும் போராட்டம்!

0
மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? - அரசு ஊழியர்கள் மத்தியில் வலுக்கும் போராட்டம்!
மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? - அரசு ஊழியர்கள் மத்தியில் வலுக்கும் போராட்டம்!
மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? – அரசு ஊழியர்கள் மத்தியில் வலுக்கும் போராட்டம்!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

இந்தியாவில் 2004ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் எவ்வித பண பலன்களையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது பணி ஓய்வு பெற்ற பின் நிலையான ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் வழங்கப்படவில்லை மேலும் பிஎப் வசதியும் வழங்கப்படவில்லை.அதனால் அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனாலும் அரசு இந்த கோரிக்கையை ஏற்கவில்லை தற்போது வரை புதிய ஓய்வூதிய திட்டமே அமலில் இருந்து வருகிறது. ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆலேசனை மேற்கொண்டு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மற்ற மாநில அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இதுவரை இல்லாத புதிய சலுகை – மாநில முதல்வர் உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நேற்று குஜராத் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்மாநிலத்தின் அகமதாபாத், மெஹ்சானா, சூரத், வதோதரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கண்டன பேரணி நடத்தினர். இந்த போராட்டத்தில் அரசு அலுவலக மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அம்மாநில அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!