ரேஷன் அட்டைதாரர்களுக்கு இதுவரை இல்லாத புதிய சலுகை – மாநில முதல்வர் உத்தரவு!
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கார்டு திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர். இந்த ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது புதிய சிறப்பு சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் கடந்த வருடங்களில் கொரோனா பெருந்தொற்று மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கியது. உடல் ரீதியாகவும், மன மற்றும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டனர். இத்தகைய நேரத்தில் மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நிவாரணத்தொகைகளும் வழங்கப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் மத்திய உணவு வழங்கல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற தகுதியற்றவர்களும் பயன் பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் குறைந்த விலையில் பொருட்களை பெற்று கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும் அதனால் உண்மையிலேயே தகுதி படைத்தவர்களுக்கு பொருட்கள் கிடைக்காமல் போகிறது என்று புகார்கள் எழுந்தது. இதனையடுத்து ரேஷன் கார்டுகள் குறித்த விதிகள் விரைவில் மாற்றபட போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் இனி அனைவரும் ரேஷன் பொருட்களை பெற முடியாத சூழல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் உத்திரபிரதேசத்தில் அந்தோதயா என்று கூறப்படும் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஆயுஷ்மான் கார்டை இலவசமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவரிடமும் ஆயுஷ்மான் அட்டைகள் இருக்க வேண்டும். மேலும் இந்த ஆயுஷ்மான் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் பல்வேறு வகையான வியாதிகளுக்கும் இலவசமாக சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கார்டை இ – சேவை மையம் வாயிலாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்