தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
கனமழை:
தமிழகத்தில் கூடுதல் வெப்பச் சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழைப்பொழிவு இருந்து வருகிறது. மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக சென்னை விமான நிலையத்தில் 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. மேலும், சென்னை, கடலூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரியில் இன்று இயல்பான வெப்பநிலையை காட்டிலும் மூன்று முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை – முதல்வர் ஒப்புதல்!
மேலும், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து, மே 21ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று வங்க கடலின் மத்திய பகுதிகளில் 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download