தமிழகத்தில் நிலவும் மின் மீட்டர் தட்டுப்பாடு – தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
தமிழகத்தில் தற்போது மின் மீட்டர் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மின் மீட்டர்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் மீட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிய மின் இணைப்பு வழங்குவதில் மின்சார வாரியம் காலதாமதம் செய்து வருகிறது. புதிதாக வீடு கட்டி குடியேற இருப்பவர்கள் மற்றும் புதிய மின் இணைப்பு பெற முயற்சிபவர்கள் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
ஏராளமானோர் புதிய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து வெகு நாட்களாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மின் மீட்டர் தட்டுப்பாடால் பல கோடி மதிப்பிலான கட்டுமான பணிகள் முடங்கியுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது மின்சாரம் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற சூழல் உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இத்தகைய நேரத்தில் மின் மீட்டர் பொருத்தாமல் மின் இணைப்பு கிடைக்காததால் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து பேசிய கட்டுமான துறை பணியாளர்கள் புதிய வீடு கட்டும் பணியின் போது மின் இணைப்பு இல்லாமல் கட்டிடங்கள் இருட்டாக உள்ளது இத்தகைய சூழலில் மின் விளக்கு தேவை என்கின்றனர்.
Exams Daily Mobile App Download